காசா உதவிக் கப்பல் சம்பவத்திற்குப் பிறகு சமீரா மெஹ்பூப்தீன் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

Sameera Mehboobdeen, காசா மக்களுக்கான மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீதான இஸ்ரேலியப் படையினரின் நடவடிக்கையின் போது தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) பாதுகாப்பாக இலங்கை திரும்பியுள்ளார்.
சர்வதேச கடற்பரப்பில் இஸ்ரேலியப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், பின்னர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசேட விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தார்.
அவரை வரவேற்க பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
குறிப்பாக “பாலஸ்தீனத்தை விடுவிப்போம்” அமைப்பின் பிரதிநிதிகள், சமீரா மெஹ்பூப்தீனின் மனிதநேய நடவடிக்கையையும் துணிச்சலான பயணத்தையும் பாராட்டி, அவர் பாதுகாப்பாக தாயகம் திரும்பியதைக் கொண்டாடும் வகையில் உற்சாக வரவேற்பளித்தனர்.
காசா பகுதியில் நிலவும் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளுக்கு உதவுவதற்காக சர்வதேச மனிதாபிமான உதவிக் குழுவுடன் இணைந்து பயணித்தபோது, அவர் இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





