Local
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைப்பு குழு நியமனம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்பிற்காக சிறப்பு குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தக் குழுவிற்கு டிஜிட்டல் பொருளாதாரத்துக்கான ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் டாக்டர் ஹான்ஸ் விஜேசூரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குழு உறுப்பினர்கள்:
- ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ
- நிதி மற்றும் நிறுவன மூலோபாய நிபுணர் தேஷால் த மெல்
- முதலீட்டு வங்கியியல், ஒன்றிணைப்பு மற்றும் கையகப்படுத்தல் நிபுணர் துமித் பெர்னாண்டோ
- நிதி அமைச்சின் செயலாளர் அல்லது பிரதிநிதி ஒருவர்
- போக்குவரத்து அமைச்சின் செயலாளர் / சிவில் விமான சேவை அதிகாரசபை பிரதிநிதி
- ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர்
- விமான சேவை, நிறுவன சட்டம் மற்றும் பொதுச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற சட்ட நிபுணர்கள்
- விமான சேவைத் துறை நிபுணர்கள்
குழுவின் நோக்கம்:
அரசாங்கத்தின் நீண்டகால நிதிச்சுமையை குறைத்து, நிலையான மற்றும் வணிக ரீதியாக செயல்திறன் கொண்ட தேசிய விமான சேவையை உருவாக்குவது இதன் முக்கிய இலக்காகும்.
முக்கிய பொறுப்புகள்:
- நிறுவனத்தின் எதிர்காலம் தொடர்பான சுயாதீனமான மூலோபாய மதிப்பீடு
- மறுசீரமைப்பு தேவைகள் மற்றும் மாற்று மாதிரிகள் குறித்து பரிந்துரைகள் வழங்குதல்
- அரசின் நோக்கங்களுக்கு ஏற்ப பொருத்தமான திட்டங்களை மதிப்பீடு செய்தல்
- தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல்
இந்த குழு, மறுசீரமைப்பு செயல்முறை முடியும் வரை அல்லது அரசால் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்படும் வரை செயல்படும்.




