EN
Local

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவித்தல்

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

கனமழை, அடர்ந்த மேகமூட்டம் மற்றும் மூடுபனி காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளின் பல பகுதிகளில் முன்னால் செல்லும் வாகனங்களைப் பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காகப் பின்வரும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

  • வாகனங்களின் முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரவிட்டவாறு பயணித்தல்.
  • காலநிலைக்கு ஏற்ப வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதுடன், தேவையேற்படின் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்தல்.
  • முன்னால் செல்லும் வாகனத்திற்கும் உங்கள் வாகனத்திற்கும் இடையில் போதுமான இடைவெளியைப் பேணுதல்.
  • அதிவேக நெடுஞ்சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கைகளை அவதானித்துப் பின்பற்றுதல்.
  • மழைக்காலங்களில் வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால், அதிவேகமாகச் செல்லும் போது திடீரென பிரேக் (Sudden Braking) போடுவதைத் தவிர்க்கவும்

Related Articles

Back to top button