EN
Local

தேசிய இளைஞர் வளர்ச்சி ஆராய்ச்சி மாநாடு (NRSYD 2026) – தேர்ந்தெடுக்கப்பட்ட 40 திட்டங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது

இளைஞர் வளர்ச்சி தொடர்பான தேசிய ஆராய்ச்சி மாநாடு (NRSYD 2026) සඳහා சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி முன்மொழிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 40 திட்டங்களுக்கு தலா ரூ. 25,000 வீதம் ஆராய்ச்சி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இளைஞர்களின் செயற்பாட்டுப் பங்களிப்பின் மூலம் சமூக மாற்றத்தை உருவாக்கும் நோக்கில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் இலங்கை திறந்த பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த தேசிய ஆராய்ச்சி மாநாட்டின் சிறப்பு நடவடிக்கையாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 40 ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த ஊக்கத் தொகை வழங்கல் நேற்று (29) இடம்பெற்றது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்ற இந்த நிகழ்வு, அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் நடைபெற்றது.

“Young People as Right Holders and Change Makers: Asset-based Pathways for Social Transformation” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த தேசிய திட்டத்தின் கீழ், நாட்டின் உயர்கல்வி நிறுவன மாணவர்கள், சுயாதீன ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கொள்கை அமைப்பாளர்கள் சமர்ப்பித்த திட்டங்களில் இருந்து 40 சிறந்த ஆராய்ச்சி திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 40 ஆராய்ச்சி திட்டங்களுக்கு தலா ரூ. 25,000 வீதம் ஆராய்ச்சி ஊக்கத் தொகை (Research Incentives) வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த அமைச்சர் சுனில் குமார கமகே, ஆராய்ச்சி அடிப்படையிலான வளர்ச்சி நடவடிக்கைகள் மூலம் சிறந்த பலன்களைப் பெற முடியும் என தெரிவித்தார். இது சாதாரண திட்டமல்ல, இளைஞர் வளர்ச்சிக்குத் தேவையான தரவுகளைப் பெறும் முக்கியமான திட்டம் எனவும் அவர் கூறினார்.

இளைஞர் விவகார பிரதியமைச்சர் தினிது சமன் ஹென்னாயகே, “திருப்தியான இளமை – சுதந்திர சிந்தனை” என்ற கொள்கையின் அடிப்படையில் ஆராய்ச்சி சார்ந்த இளைஞர் வளர்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார். இவ்வாறான தேசிய ஆராய்ச்சி மாநாடு இலங்கையில் முதன்முறையாக நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆராய்ச்சி திட்டங்கள் டிஜிட்டல் மற்றும் பசுமை பொருளாதாரம், கல்வி மற்றும் தலைமைத்துவம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஊடகம், மனநலன், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் பங்கேற்பு போன்ற துறைகளை உள்ளடக்கியவையாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த திட்டங்களின் இறுதி முடிவுகள் எதிர்வரும் தேசிய ஆராய்ச்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button