Local
நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு நீதியரசர் யசந்த கோதாகொட நியமனம்

நீதிச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக Yasanta Kodagoda உயர்நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொடவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளது.
அரசியலமைப்பு பேரவையானது அதன் தலைவர் சபாநாயகர் Jagath Wickramaratne தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (22) பாராளுமன்ற கட்டத்தொகுதியில் கூடியது.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் S. Thurairaja அவர்களின் ஓய்வைத் தொடர்ந்து நீதிச்சேவை ஆணைக்குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை பரிசீலனை செய்தது.
ஜனாதிபதியின் பரிந்துரைக்கு பேரவையின் அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்ததையடுத்து, நீதியரசர் யசந்த கோதாகொடவை நீதிச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.




