EN
Local

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய சட்டத்தரணிக்கு விளக்கமறியல்

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் சந்தேகநபராக பெயரிடப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் தமரா குமாரி அபேரத்ன என்ற சட்டத்தரணி ஆவார்.

சந்தேகநபரை அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.

தடுப்புக் காவல் உத்தரவு காலம் நிறைவடைந்ததை அடுத்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button