EN
Local

அரசியல் கட்சிகளின் மே தின கூட்டங்கள்

சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினப் பேரணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி, இன்று நாடளாவிய ரீதியில் 21 மாவட்டங்களில் 21 மே தினக் கூட்டங்களை நடத்துகிறது.

மக்கள் குடியரசிற்கு மக்கள் சக்தி என்ற கருப்பொருளின் கீழ் இவை நடைபெறுகின்றன.

நுவரெலியா மாவட்ட மே தினப் பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டுள்ளார்.

சர்வஜன அதிகாரத்தின் மே தினக் கூட்டம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தலைமையில் கொழும்பு ஹென்றி பேத்ரிஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை மாளிகாவத்தை பி.டி.சிறிசேன விளையாட்டு மைதானத்தில் தமது மே தினப் பேரணியை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இந்த வருட மே தினக் கூட்டத்தை பொரளை கெம்பல் மைதானத்தில் நடத்தவுள்ளது.

முன்னிலை சோசலிச கட்சியினர் தமது மே தினப் பேரணியை கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

Related Articles

Back to top button