சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 41 பேர் கைது

இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து கடந்த முதலாம் திகதி முதல் 15ஆம் திகதி வரை உள்ளூர் நீர்ப்பரப்புகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
அதற்கமைய, சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 11 சிறுபடகுகள் மற்றும் 2 இழுவைப் படகுகள் ஆகியவற்றுடன் 41 சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.
இதன்படி, திருகோணமலை செம்மலை, செட்டிபாளையம், எலிசபெத் தீவு, கோழிப்பண்ணை மற்றும் மேலும் பல கடல் பகுதிகளை உள்ளடக்கி, கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படைக் கட்டளைகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கடல் அட்டைகள், வணிக வெடிபொருட்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், டிராக்டர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக முல்லைத்தீவு, கின்னியா, கோட்பே, ஈச்சலம்பட்டு, களவஞ்சிக்குடி, கிளிநொச்சி, புத்தளம் ஆகிய இடங்களில் உள்ள மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்கள அலுவலகங்களிலும், புல்முடா விசேட அதிரடிப் படையிடமும் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.




