EN
Local

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது குறித்து வெளியான அறிவிப்பு

2025/2026 கல்வியாண்டிற்காக அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள், 2026 செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (06) நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டதன் பின்னர், அனைத்து மாணவர் பதிவுப் பட்டியல்களையும் 2026 ஓகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, 2026 செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கான குறிப்பிட்ட திகதிகளை அந்தந்தப் பல்கலைக்கழகங்களே தீர்மானிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

Related Articles

Back to top button