Local
கிரிமெட்டியாவ குளத்தில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் மரணம்

கெக்கிராவ, கிரிமெட்டியாவ பகுதியில் உள்ள கிரிமெட்டியாவ குளத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிரிமெட்டியாவ குளத்தில் படகு ஓட்டிச் சென்றபோது, படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




