Local
இறக்குமதி செய்யப்படும் சோளத்துக்கான வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் சோளத்துக்கு விசேட வர்த்தகப் பண்ட வரியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி ஒரு கிலோகிராம் சோளத்துக்கான வர் ரூபா 50 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி வீதமானது, 2026 மே மாதம் 05ஆம் திகதி முதல் 2026 டிசம்பர் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் (04) இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.




