EN
Sports

ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளுக்காக விமானப்படை விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு

2026ம் ஆண்டுக்கான ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளுக்காக விமானப்படையைச் சேர்ந்த 17 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு

சீனாவில் நடைபெறவுள்ள 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபெறவுள்ள விளையாட்டு குழுவில் இலங்கை விமானப்படையை சேர்ந்த 17 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த போட்டிகள் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

இப்போட்டியில் பங்கேற்கும் விமானப்படை அணியினர் , தடகளம், கைப்பந்து, கரப்பந்து, மல்யுத்தம் மற்றும் கபடி ஆகிய விளையாட்டுப் பிரிவுகளில் களமிறங்க உள்ளது.

போட்டியில் பங்குபெறுவதற்கு முன்னர் பங்கேற்கும் விமானப்படை வீர வீராங்கனைகள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதன்போது விமானப்படைத் தளபதி விளையாட்டு வீரர்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button