EN
Local

மாமா தாக்கியதில் மருமகன் மரணம்

வெலிகம, பரணகடே பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (17) இரவு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் பரணகடே, வெலிகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார்.

உயிரிழந்த இளைஞன் தனது தாய், தந்தை, இரு சகோதரர்கள் மற்றும் தாயின் மூத்த சகோதரருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதன்போது, கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கும் அவரது தாயின் மூத்த சகோதரருக்கும் இடையில் ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில், குறித்த நபரால் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, குற்றத்துடன் தொடர்புடைய 58 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button