EN
Local

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மழையுடனான காலநிலை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (12) மாலை 4:00 மணி முதல் நாளை (13) மாலை 4:00 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவித்துள்ளது.

பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் மண்சரிவு அறிகுறிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், தேவையேற்படின் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பின்வரும் மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

  • பதுளை மாவட்டம்: பண்டாரவளை
  • களுத்துறை மாவட்டம்: வலல்லாவிட்ட
  • கண்டி மாவட்டம்: உடபலாத, பாதஹேவாஹெட்ட, யட்டிநுவர, கங்க இஹல கோரளை, அக்குரணை, கங்கவட்ட கோரளை, தொலுவ, பஸ்பாகே கோரளை மற்றும் பன்வில.
  • கேகாலை மாவட்டம் : அரநாயக்க, ரம்புக்கனை, மாவனல்லை, கேகாலை, புலத்கொஹுபிட்டிய மற்றும் யட்டியாந்தோட்டை.
  • குருநாகல் மாவட்டம்: ரிதிகம
  • மாத்தளை மாவட்டம்: நாவுல, அம்பன்கங்க கோரளை மற்றும் ரத்தோட்டை.
  • மொனராகலை மாவட்டம்: வெல்லவாய மற்றும் படல்கும்புர.
  • இரத்தினபுரி மாவட்டம்: கலவானை, கொடகவெல மற்றும் இரத்தினபுரி

குறித்த பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவ்விடங்களிலிருந்து வெளியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Related Articles

Back to top button