Local
கபில சந்திரசேனவின் மரணம் குறித்து அமைச்சர் தெரிவித்த விடயம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக இந்த நேரத்தில் எவ்வித உறுதியான கருத்தையும் தெரிவிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மரணப் பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே இது குறித்து உறுதியான கருத்தை வெளியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.




