EN
Sports

LPL தொடரின் கால அட்டவணையில் மாற்றம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 6ஆவது லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் கால அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, இத்தொடர் ஜூலை 10ஆம் திகதி ஆரம்பமாகி, ஒகஸ்ட் 5ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

முன்னதாக இப்போட்டிகளை ஜூலை 8ஆம் திகதி ஆரம்பித்து, ஒகஸ்ட் 8ஆம் திகதி நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.

இதேவேளை, புதிய மாற்றங்களுக்கு அமைய இத்தொடரின் போட்டிகள் நான்கு மைதானங்களில் நடத்தப்படவுள்ளன.

அதன்படி, ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கொழும்பு ஆர். பிரேமதாச, பல்லேகலை மற்றும் தம்புள்ளை மைதானங்களுடன் மேலதிகமாக கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்திலும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்திய இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ணத் தொடருக்காக மைதானங்களைத் தயார்படுத்தும் பணிகளுக்காக, இம்முறை எல்.பி.எல் தொடரை ஒத்திவைக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button