EN
International

இந்தோனேசியாவில் இரு ரயில்கள் மோதி விபத்து- 7 பேர் பலி

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே இரு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெகாசி திமூர் ரெயில் நிலையில், நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் ரயில் மீது மற்றொரு விரைவு ரயில் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 80இற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் நடைபெற்றுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Related Articles

Back to top button